Unordered List

valaipookkal.com Tamil Blogs
Showing posts with label தங்க நகை. Show all posts
Showing posts with label தங்க நகை. Show all posts

Monday, May 26, 2014

களவுகள் பலவிதம்

புதிதாக தொடங்கியிருக்கும் நகை அபகாிப்பு முறையும் கொழுப்பு கூடியவர்களும்...

செய்தி
பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!- தெஹிவளையில் சம்பவம்.


கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தில் ஒரு பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.

உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது சொல்லி நகையை கழட்ட வைத்து பிறகு தாங்க நான் உள்ளே போட்டுத் தாரன் என்று சொல்லி வைக்கிற மாதிரி வைத்து ஏமாற்றிக் கொண்டு  போகும் இம்முறையிலான களவில் பல பேர் தங்கள் நகைகளை இழந்துள்ளனர்.

இச்செய்தி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. ஆனால் நிறைய பேர் பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை.

 அப்படியே பொலிஸ் பிடிச்சா மட்டும் என்ன நடக்கபோகிறது கோர்ட் கேஸ் என்று சொல்லி பிறகு ஒரு 4, 5 வருஷம் வழக்கம் போல கம்பிய எண்ணிக்கொண்டு இருக்கும் போது சுதந்திரதினம், வெசக் தினம் என்று நல்லநாள் பெருநாளுக்கு அரசு வெளியே விடும். திரும்ப விட்ட வேலையை தொடங்குவது தானே, வேறென்ன நடக்குமாக்கும்.

இந்த செய்தி வாசித்தவுடன் நமக்கு அந்த கள்ளன் மீது கோபமோ வரவில்லை மாறாக பெண்மணி மீதுதான் வருகிறது. எவ்வளவோ களவுகள் அதனால் ஏற்பட்ட காயங்கள், உயிாிழப்பு பற்றிய செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவ்வளவும் தெரிந்து வைத்திருந்தும் இப்படி லூஸ் மாதிாி நகையை போட்டுக்கொண்டு திரியுதே என்று கண்டபடி பேசதான் வரும்.



சம்பவம் 1
ஒரு பெண் தனது நகையை மீட்பதற்காக கள்ளனுடன் போராடியதில் பலத்த காயம், யாரும் உதவ முன்வரவில்லை.

சம்பவம் 2
சங்கிலியை பறிப்பதற்காக பெண்ணை தாக்கி கீழே தள்ளிவிட்டு சங்கிலியை புடுங்கியதால் அப்பெண்ணிற்கு முகமெல்லாம் காயம்.

இவையெல்லாம் பேப்பரில் வரவில்லை தெரிந்தவர்களுக்கு நடந்த கதை. நிச்சயமாக இப்படியான கதைகள் எல்லோருக்குமே தெரியும்.


இம்மாதிரியான செய்திகளுக்கு பிறகு முக்கால்வாசி பேர் தங்கநகைகளை அநாவசியமாக போடுவதில்லை. அநேகமாக கவாிங் தான், அதுவும் சிலவேளைகளில் போடுவதில்லை ஏனென்றால் அது உண்மையான நகை மாதிரி இருக்கும் பிறகு தேவையில்லாமல் கள்ளனை கூப்பிடுவது போல இருக்கும்.

தங்கநகை போடுவதென்றால் பலத்த பாதுகாப்புடன் போடுவார்கள், அதாவது யாராவது ஆண் துணையுடன் போகும் போது அல்லது வீட்டிலிருந்து போய்சேரும் இடம்வரை வாகனத்தில் போய் வரும் போது மட்டுமே..

இங்கு யாரும் நகைகள் போடவில்லையே என்று கௌரவம் பார்ப்பதில்லை. காரணம் அநாவசியமாக ஆஸ்பத்திரிக்கு போகவிருப்பமில்லை.

அப்படியும் நகை போடுபவர்கள் நிச்சயமாக கொழுப்பு கூடியவர்கள்தான்.

விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkr7.html#sthash.QgGrFfsz.dpuf
விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkr7.html#sthash.QgGrFfsz.dpuf