Unordered List

valaipookkal.com Tamil Blogs
Showing posts with label முகபுத்தகம். Show all posts
Showing posts with label முகபுத்தகம். Show all posts

Saturday, August 9, 2014

வீடியோ தானாக இயங்குவதை நிறுத்துவது எப்படி? - Facebook குறிப்பு

இப்பொழுதெல்லாம் Facebook ன் Settings காரணமாக news feed ல் வரும் வீடியோக்கள் எல்லாம் தானாகவே இயங்குகின்றன. அது சில சமயங்களில் எமக்கு சங்கடங்களைத் தருகின்றது. அதனால் வீடியோ தானாக இயங்குவதை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கும் உங்களுக்காக..

முதலில் உங்கள் Facebookல் வலது பக்கம் உள்ள பூட்டினை (padlock) அல்லது கீழ் நோக்கி காட்டும் அம்புக்குறியை (down arrow)click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு See More Settings OR Settings ஐ click செய்யவும்


அதன்பிறகு videos என்று இருக்கும் link ஐ click செய்யவும்


 
இப்போது உங்களுக்கு video setting பக்கம் வரும்.
Auto-Play Videos உங்களுக்கு on என்று இருந்தால் அதனை off செய்து விடுங்கள்




இனி உங்களுடைய news feedல் வரும் வீடியோக்கள் தானாக இயங்கமாட்டாது.

Wednesday, January 16, 2013

லைக்குங்க..

யாரோ சில புண்ணியவாங்கள் ஒன்று கூடி ஆராய்ச்சி செய்தாங்களாம் ஒருத் தர் குறைந்தது 7 தடவையாவது முகபுத்தகத்தை பார்ப்பாரம்.

அப்படி என்னதான் இருக்கு அதில,

நாம போட்டதுக்கு எவனாவது comment போட்டானா லைக்கிறானா என்று பார்க்கிறது.

நாம ஒருத்தனுக்கு  comment போட்டமே அதுக்கு பதில் வந்திருக்கா

எவனாவது ஏதாவது போட்டிருக்கானா..

இதவிட வேற என்னத்த பார்க்கிறது.

ஒரு படம்... ஒரு status.. ஒரு link share பண்ணினால் commentதான் போடமாட்டேங்குறாங்க சரி பிழைச்சு போகட்டும் என்றால் லைக்கமாட்டேன்கிறாங்களா??

அதுக்கு சில யோசனைகள் சொல்லுறன்.
  1. கமெராவில் எடுத்து PC/Laptop ல் transfer செய்த பிறகு அப்படியே facebook album ல போட வேண்டாம்.

    ஏனென்றால்  அதில் சில படங்கள் clear இல்லாமல் இருக்கலாம் (out of focus). சில நேரங்களில் அந்த படங்களில் என்ன இருக்கு என்று உங்களால் கூட பார்க்க முடியாமல் இருக்கும். சிலவேளைகளில் அந்த படம் எதுக்காக எடுத்தது என்றே தெரியாமலிருக்கும். அதை பார்க்கும் உங்க நண்பர் கூட்டத்துக்கு எரிச்சலை உண்டாக்கும்.  அத்துடன் ஒரே மாதிரியான படத்தை திரும்ப திரும்ப upload செய்வது லைக்குகளை குறைக்கும்.


    "நீங்களே பாருங்க இந்த படத்தில என்ன விளங்குதென்று facebook ல போட்டிருக்காங்களோ தெரியல."

    அதனால படங்களை தெரிவு செய்து facebook ல போடுங்க, அப்போ தான் மற்றவங்களும் உங்க படங்களை விரும்பி பார்ப்பாங்க லைக்குவாங்க.
  2. கண்ட கண்ட படங்களையும் share செய்ய வேண்டாம். ஏதோ நீங்க நல்ல உள்ளம் படைத்தவராக இருக்கலாம் அப்படியென்றால் நீங்க நேரடியாக உதவிய செய்யுங்க. பார்க்க முடியாத படங்களை எல்லாம் போட்டு அவனவன்  1 LIKE = 5$, 1 SHARE = 3$, 1 COMMENT = 2$ என்று கூவி கூவி தன்னுடைய postக்கு freeயா power star வேலய காட்டுறான்.


    "இதனால உங்களுக்கு ஏதாவது புண்ணியம் சேருதா இல்ல அந்த படத்தில இருக்கிறவனுக்குதான் காசு போய் சேருதா?"

    ஒருத்தரோட profileல பார்த்தா சந்தோஷமா இருக்கணும்.

    "அநேகமா இந்த profile owner தன் profileலயே பார்க்கமாட்டாங்க போல"

    ஒரு profile முழுக்க இப்படி postகள் இருந்தா நீங்க அடிக்கடி போய் பார்ப்பீங்களா பிறகு எப்படி மற்றவங்களை எதிர்பார்க்க முடியும்? எவனுமே வரமாட்டான். இது உங்க profileல மட்டும் இருந்தா பரவாயில்ல, ஆனா மற்றவங்கட home pageல காட்டும். உங்க மனித நேயத்தை நேரில காட்டுங்க, இல்ல நீங்க மட்டும் ரசியுங்க. இப்படி போட்டு மற்றவங்களை அறுக்காதீங்க.

    "இதுதான் உண்மை. மற்றவங்களுக்கு உதவி செய்யுறவங்க வெளியால சொல்லிக்கொண்டு திரியமாட்டாங்க."

  3. கண்டகண்ட appsகளையும் பாவித்து மற்றவர்களை tag செய்து இம்சை படுத்தாதீர்கள். ஒரு படத்தில இருக்கிறவங்களை tag செய்யுறது சரி ஆனால் உள்ள எல்லாத்திலயும் tag செய்யுறது உங்களுக்கே ஓவரா தெரியல? இவனுக்கு வேற வேலயே இல்ல என்று எல்லாரும் சலிப்படைவாங்க.

    "இந்த apps இனால் உங்களுக்கு என்ன பயன்? apps ownerக்கு உங்க விபரங்கள், படங்களை பாவிப்பதற்கு அனுமதி கொடுக்கின்றீர்கள்"
  4. நீங்க சொந்த கருத்துகளை சொன்னாலும் பரவாயில்ல ஆனால் இன்னொருத்தரோட கருத்தை சொந்தமாக பாவிப்பது, பொதுவுடைமை சமவுடைமை என்று உங்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யுறேன் என்று சொல்லி நீங்க போட்டாலும் யாரும் கவனிக்கமாட்டாங்கள். அந்த pageக்கு தான் hit கூடுமே தவிர உங்களுக்கில்லை.

    "உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க இதில இருக்கிறத நீங்க கடைபிடிக்கிறீங்களா?"
  5. ஏதாவது விசேஷத்துக்கு வாழ்த்து தெரிவிப்பது என்றால் உடனே ஒரு படம் போட்டு உள்ள எல்லா நண்பர்களையும் tag செய்யுறதில என்ன பயன் என்று விளங்கல. சரி tag பண்ணீட்டான் என்று தான் லைக்குவாங்களே தவிர விரும்பி லைக்கமாட்டாங்க. முக்கியமாக விடயம் யாரையாவது tag செய்ய மறந்தால் பிறகு அவங்க உங்க greetingக்கு பதில் போடாமல் விட சந்தர்ப்பமுண்டு.

    "இதில tag செய்திருக்கிற எத்தனை பேருடைய  நண்பர்களுக்கு காட்டும்? Timeline and Tagging Settings ல How can I manage tags people add and tagging suggestions? ல் Review tags people add to your own posts before the tags appear on Facebook? ல் enable என்று போட்டிருப்பாங்க.."
    போடும் வாழ்த்து படங்களை யாரும் போடாதவற்றை தேடி பிடித்து போடுங்க.

    "இதில் யாரையும் tag செய்யவேயில்ல ஆனாலும் லைக்குகளுக்கு பஞ்சமில்லை"

    இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்வதால் உங்களை உங்கள் நண்பர்கள் தொடர்ச்சியாக பார்வையிடுகின்றனர் என்று நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. உங்கள் பதிவுகள் hide செய்யப்படுகிறது, அல்லது acquaintance என்ற listல் நீங்கள் சோ்க்கப்படுகிறீர்கள் அல்லது உங்கள் நண்பர் news feedல் உங்கள் பதிவுகளை முக்கியமில்லை என்று updates setting செய்திருக்கலாம். ஆனால் இவையனைத்தும் உங்களுக்கு தெரிவிக்கபடமாட்டாது. நீங்கள்  முக்கியமான பதிவுகள் படங்கள் போட்டாலும் மற்றவர்கள் அதை கவனிக்காமல் போய்விடுவார்கள்.


  6. ஒரு பதிவு போடும்போது மற்றவங்க யாரும் போடாத பதிவுகளாக தேடி போடுங்க. எல்லாரும் போட்டதையே நீங்களும் போட்டால் யாருமே லைக்க மாட்டாங்க.

  7.  facebookல் give & take policy ரொம்ப முக்கியம். நீ என் postஜ லைக்கினால் தான் நானும் லைக்குவேன் என்று இருப்பாங்க. ஆனா நீங்க அவனுடைய எல்லா postயும் லைக்கினால் உங்களுக்கு வேற வேலயே இல்லயா என்று நினைப்பாங்க. அதனால் அவசியமானதை மட்டுமே லைக்குங்க, உங்க மரியாதைய காப்பாத்துங்க.


  8.  ஏதாவது post போட்டு அதற்கு அதிகளவான லைக்குகள் வேணுமென்றால் லீவு நாள் பார்த்து உங்க நண்பர்கள் எந்த நேரம் அதிகளவில் இருப்பார்கள் என்று பார்த்து போட்டால் லைக்குகள் வர சந்தர்ப்பம் இருக்கு. எல்லாரும் கிரிக்கெட்டி போட்டியில் தாங்கள் தான் விளையாடுவது போல் மும்முரமாக TV யில் பார்த்துக்கொண்டு இருந்தால் உங்கள் post சிலவேளைகளில் கவனிக்கபடாமல் போய்விடும். யாருமே லைக்கல அதுக்காக உங்க postகளை நீங்களே லைக் போட்டு உங்க மரியாதைய குறைச்சுக்காதீங்க. உங்களுக்கு பிடிச்சதால தானே போட்டிருக்கிறீங்க. பிறகெதுக்கு லைக்கு.
முடிவு: என்ன செய்தாலும் வித்தியாசமாக செய்யனும் அதை ரசிக்கிற மாதிரியும் இருக்கனும். அப்போ லைக்குகள் தன்னால வரும்.