David J Slater 2011 அளவில் இந்தோனேஷியாவிற்கு குரங்குகளை படமெடுக்க போயிருந்தார் பிறகு Slater tripodல் கமெராவை வைக்க போன நேரம் அங்கிருந்த naruto என்ற பெயருடைய குரங்கு கமெராவை எடுத்துவிட்டது. பிறகு அதுவே shutter ஐ அமத்த அது செல்பிக்களாக வரத்தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 100 படங்கள் எடுத்திருந்தது. அதில் சில படங்கள் நல்லா இருக்கவே ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கிறார் Slater. அது உலக அளவில் பரவிவிட்டது. இந்த கதையை விக்கிபீடியா தனது தளத்திலும் குரங்கின் படத்துடன் போட்டுவிட்டது. இதைப்பார்த்த Slater wiki எப்படி எனக்கு உரிமையான படத்தை அதுவும் Royalty-free images என்ற பகுதியில் போடலாம் அதனை எடுத்து விடு என்று சொல்லி wikiக்கு பலதடவைகள் சொல்லியுள்ளார். ஆனால் விக்கி அதை எடுக்க மறுத்துவிடுகிறது. அந்த படத்துக்கு உரிமையாளர் அந்த குரங்குதான், கமெரா வைச்சிருந்தவர் உரிமைகோர முடியாது என்று சொல்லிவிட்டது.
இந்த நேரத்தில் பீட்டா naruto குரங்குக்கு ஆதரவா வந்து ரோயல்டி என்று
சொல்லி காசை புடுங்களாம் என்று மூக்கை நுழைத்துள்ளது. Slater அந்த #naruto
குரங்கை ஏமாற்றிவிட்டார், இந்த புகைப்படத்தை naruto எடுத்தது அதுதான்
இந்தப்படத்தை பயன்படுத்த முடியும் என்றது. இது காப்புரிமை சட்டத்திற்கு
எதிரானது என்று கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் Slaterற்கு எதிராக 2015ம்
ஆண்டளவில் வழக்கு தொடுத்தது. அதன்போது Slater இந்த படத்தை விற்கும்போது
வரும் காசில் 25% குரங்குகளை பாதுகாக்கும் அமைப்பிடம் கொடுக்கிறேன் என்று
சொல்லியுள்ளார். இதற்கு பீட்டாவும் உடன்பட்டு வழக்கை மீள பெற இருக்கும்போது
கலிபோர்னியா நீதிமன்றம், பீட்டா அமைப்பை வழக்கை மீளபெற விடாமல் செய்தது.
3 வருடமாக நடந்த வழக்குக்கு தீர்ப்பு இப்பதான் வந்துள்ளது. இதில் பீட்டா மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கண்டித்து இருக்கிறது. அதோடு, அந்த குரங்கு எடுத்த போட்டோவிற்கு, அந்த குரங்கு காப்புரிமை கோர முடியாது, விலங்குகள் பதிப்புரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்ய முடியாது, இனி வரும் காலங்களில், உங்கள் கேமராவை பயன்படுத்தி ஏதாவது ஒரு விலங்கு புகைப்படம் எடுத்தால், அந்த புகைப்படத்திற்கு அந்த விலங்கோ, #பீட்டா போன்ற விலங்குகள் நலவாரியமோ உரிமை கோர முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இனியாவது பீட்டாகாரர் பொத்திகொண்டு இருக்கட்டும்..
3 வருடமாக நடந்த வழக்குக்கு தீர்ப்பு இப்பதான் வந்துள்ளது. இதில் பீட்டா மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கண்டித்து இருக்கிறது. அதோடு, அந்த குரங்கு எடுத்த போட்டோவிற்கு, அந்த குரங்கு காப்புரிமை கோர முடியாது, விலங்குகள் பதிப்புரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்ய முடியாது, இனி வரும் காலங்களில், உங்கள் கேமராவை பயன்படுத்தி ஏதாவது ஒரு விலங்கு புகைப்படம் எடுத்தால், அந்த புகைப்படத்திற்கு அந்த விலங்கோ, #பீட்டா போன்ற விலங்குகள் நலவாரியமோ உரிமை கோர முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இனியாவது பீட்டாகாரர் பொத்திகொண்டு இருக்கட்டும்..
குறிப்பு: naruto monkey என்று கூகிளாண்டவரிடம் கேட்டால் குரங்கர் விதம்விதமா எடுத்த செல்பீக்கள் வரும்.














