Unordered List

valaipookkal.com Tamil Blogs

Saturday, January 23, 2016

புது வீடு

2 கிழமையாக காலையில் யன்னலைத் திறக்கும் போது பக்கத்து வீட்டு கூரைக்கு மேலே இருந்து ஒரு மீன் கொத்திப் பறவை கீச்சிட்டுக்கொண்டு இருக்கும்.. கேட்டால் தான் வந்திட்டாராம் என்று சொல்லி தன் மற்றைய ஜோடியை கூப்பிடுறாராம். கொஞ்ச நேரத்தில் மற்றைய மீன்கொத்திப் பறவை வந்துவிடும்.



இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கட்டிடத்தின் பின் பகுதியில் சிமென்ட் உடைந்து செங்கல் வெளியே தொியும் ஒரு பகுதியை தங்கள் பொந்தாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறாங்களாம்.


இவர்கள்தான் அந்த ஜோடி
இருவரும் மாறிமாறி அந்த பொந்தை தங்கள் வசதிக்கேற்ப செதுக்குகிறார்கள். எப்படி அந்த சொண்டால் செங்கல்லை உடைக்கிறார்களோ தொியவில்லை.

2 நாட்களுக்கு முன் மரங்கொத்திப்பறவை வந்து வழமைபோல் கீச்சிட்டுக்கொண்டு இருந்தது.. மற்றைய பறவை வரவில்லை.. கொஞ்ச நேரம் பார்த்துவி்ட்டு போய்விட்டது..

அதன் பிறகு இரண்டும் வரவிவேயில்லை........................

இனி எப்ப வருமோ.. நானும் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.......................