Unordered List

valaipookkal.com Tamil Blogs

Thursday, October 2, 2014

ச னாவின் கவலை

னா ஒரு நாள் கவலையா இருந்திச்சு. என்னடா இது ஒரு நாளும் இல்லாத திருநாளாம் ச னா இப்படி கவலையா இருக்கே என்னதான் நடந்ததாம் என்று யோசிச்சுக்கொண்டே கேட்டன், ச னா ஏன் கவலையா இருக்கிறாய் என்று.
அப்ப ச னா நான்  எங்க சாப்பிட போனாலும் முழுக்க சாப்பிட விடாம  ஆட்கள் வந்து சாப்பாட்ட குப்பைக்க போடுறாங்க என்று கவலையா சொல்லிச்சு.

எனக்கு விளங்கவில்லை விளக்கமா சொல்லு என்றன்.

ச னா சொல்லிச்சு... எங்க வீட்டில இருக்கிற அம்மா புளிச்சாதம் செய்து எல்லாருக்கும் கொடுத்துட்டு மீதிய வைச்சிருந்தா. நானும் எல்லாரும் சாப்பிட்டாச்சு தானே மிச்சத்த நானும் சாப்பிடுவம் என்று சாப்பிட போனன். நான் மெல்ல மெல்ல சாப்பிட 2 நாளும் ஆகிட்டு சாப்பிட்டு முடியல அதுக்குள்ள வீட்டுக்காாி வந்து புளிச்சாதம் புளிச்சாதம் ஆகிட்டு என்று சொல்லி குப்பைக்க போட்டுட்டா என்று.

அதுக்கு அதுதான் உனக்கு சர்க்கரை பொங்கல், சமோசா என்று எத்தனையோ இருக்கேக்க எதுக்கு புளிச்சலுக்குள்ள போறாய் என்று கேட்டனா உடனே நான் திருந்திடுறன் என்று சொல்லிச்சு ச னா.

எல்லாம் அவன் செயல்...




Saturday, August 9, 2014

வீடியோ தானாக இயங்குவதை நிறுத்துவது எப்படி? - Facebook குறிப்பு

இப்பொழுதெல்லாம் Facebook ன் Settings காரணமாக news feed ல் வரும் வீடியோக்கள் எல்லாம் தானாகவே இயங்குகின்றன. அது சில சமயங்களில் எமக்கு சங்கடங்களைத் தருகின்றது. அதனால் வீடியோ தானாக இயங்குவதை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கும் உங்களுக்காக..

முதலில் உங்கள் Facebookல் வலது பக்கம் உள்ள பூட்டினை (padlock) அல்லது கீழ் நோக்கி காட்டும் அம்புக்குறியை (down arrow)click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு See More Settings OR Settings ஐ click செய்யவும்


அதன்பிறகு videos என்று இருக்கும் link ஐ click செய்யவும்


 
இப்போது உங்களுக்கு video setting பக்கம் வரும்.
Auto-Play Videos உங்களுக்கு on என்று இருந்தால் அதனை off செய்து விடுங்கள்




இனி உங்களுடைய news feedல் வரும் வீடியோக்கள் தானாக இயங்கமாட்டாது.

Sunday, July 20, 2014

செடிக்கு கூட ரோஷம் உண்டாம்.

வீட்டுக்கு வெளியே ஒரு செடி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது. கத்தரி செடியா இருக்குமோ? இல்லை சுண்டங்காய் இல்லை இல்லை அது காட்டு கத்தரி இல்லை அது ஒன்றுமே காய்க்காது சும்மா வளருது.. இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு குரல்கள் வந்தவண்ணம் இருந்தது.

கிட்டத்தட்ட 3 மாதகாலமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதை இந்தளவுக்கு வளரவிட்டதே பெரும்பாடாகிவிட்டது. ஏனென்றால் எங்கள் வீட்டு வீதிக்கு மேயவரும் மாடுகளிடமிருந்து தப்பிவிட்டது. அடுத்து எங்கள் வீட்டின் முன் வீட்டுக்காரருக்கு சமூகசேவை உணர்ச்சி அதிகம், அதனால் ஏதாவது செடி அல்லது மரம் வளருவது தெரிந்துவிட்டால் உடனே பிடுங்கிவிடுவார். கேட்டால் அதில் டெங்கு நுளம்பு இருக்கும் என்று சொல்லிவிடுவார்.

இதையெல்லாம் கடந்து வளருதே தவிர அது என்ன செடி என்று கொஞ்சநாளா கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஒரு மாதிரி பூ வந்தால் நாவல் கலர் என்றதால் கத்தரி செடி என்று கண்டுபிடித்தோம். பூ பூக்குதே தவிர காய் வரவில்லை. அதனால் அப்பா அதற்கு முன்னால் போய் சொன்னார் ஒரு கிழமை பார்ப்பன் அதுக்குப் பிறகும் ஒன்றும் வராவிட்டால் வெட்டிவிட்டுவன் என்று சொன்னார். அதுக்கு தமிழ் விளங்கிட்டு போல ரோஷம் வந்து காய்க்க தொடங்கிவிட்டது.

றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய்
பிறகு காய் கொஞ்சம் வளரும் போது அப்பா பார்த்திட்டு அம்மாவிடம் கேட்டார் என்ன மாதிரி விடுவமா புடுங்குவமா என்று, அம்மா சொன்னார் இப்படியே விட்டால் ரோட்டில போற வாறவங்க புடுங்கிடுவாங்க எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்று. அப்பா அது வளர்ந்தது காணும் என்று கத்தரிக்காயை வெட்டிவிட்டார்.

இன்று வீட்டில் மத்தியான சாப்பாட்டில் எங்கள் றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய் குழம்புக்குள் குதிக்க தயாராகிவிட்டார்.

Saturday, June 21, 2014

நாமும் தமிழர்களா ??


“புலம்பெயர் தமிழர்களே எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்....”

பேஸ்புக் மற்றும் பலப்பல வெப்சைட்களில் உங்கள் ஓய்வு நேரத்தை செலவளித்துக் கொண்டிருப்பீர்கள், இதையும் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்.

உங்களால் முடிந்தால் இதை பகிருங்கள்.
https://docs.google.com/file/d/0B0TAUuYqgMeQNXNoeUt6SmlobDA (to read or download)

உங்கள் உறவுகளுக்காக  நீங்கள் செய்யும் உதவிகள் பெறுமதிமிக்கவை......



Saturday, June 14, 2014

இன்டைக்கு Father's dayயாமே

இன்று தந்தையர் தினம் என்று ரேடியோவில் சொல்லிச்சு. இத கேட்ட பிறகும் சும்மா இருக்கிறதா என்று நானும் சொன்னன் அப்போய் இன்டைக்கு Father's dayயாம் Happy father day என்றன். அதுக்கு அப்பா சொன்னார், Father's day என்றால் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. விடியகாத்தால வந்து ஒரு envelope தந்து அதுக்குள்ள ஒரு திறப்பை வைத்து Father's day அப்பா இந்தாங்க Father's day gift வெளியால கார் நிக்குது அதுட திறப்பு தான் இது என்று சொல்லி தரவேணுமாம்.

இதுக்கு நான் Father's day க்கு wish பண்ணாம சும்மா இருந்திருக்கலாமோ??????

Monday, May 26, 2014

களவுகள் பலவிதம்

புதிதாக தொடங்கியிருக்கும் நகை அபகாிப்பு முறையும் கொழுப்பு கூடியவர்களும்...

செய்தி
பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!- தெஹிவளையில் சம்பவம்.


கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தில் ஒரு பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.

உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது சொல்லி நகையை கழட்ட வைத்து பிறகு தாங்க நான் உள்ளே போட்டுத் தாரன் என்று சொல்லி வைக்கிற மாதிரி வைத்து ஏமாற்றிக் கொண்டு  போகும் இம்முறையிலான களவில் பல பேர் தங்கள் நகைகளை இழந்துள்ளனர்.

இச்செய்தி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. ஆனால் நிறைய பேர் பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை.

 அப்படியே பொலிஸ் பிடிச்சா மட்டும் என்ன நடக்கபோகிறது கோர்ட் கேஸ் என்று சொல்லி பிறகு ஒரு 4, 5 வருஷம் வழக்கம் போல கம்பிய எண்ணிக்கொண்டு இருக்கும் போது சுதந்திரதினம், வெசக் தினம் என்று நல்லநாள் பெருநாளுக்கு அரசு வெளியே விடும். திரும்ப விட்ட வேலையை தொடங்குவது தானே, வேறென்ன நடக்குமாக்கும்.

இந்த செய்தி வாசித்தவுடன் நமக்கு அந்த கள்ளன் மீது கோபமோ வரவில்லை மாறாக பெண்மணி மீதுதான் வருகிறது. எவ்வளவோ களவுகள் அதனால் ஏற்பட்ட காயங்கள், உயிாிழப்பு பற்றிய செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவ்வளவும் தெரிந்து வைத்திருந்தும் இப்படி லூஸ் மாதிாி நகையை போட்டுக்கொண்டு திரியுதே என்று கண்டபடி பேசதான் வரும்.



சம்பவம் 1
ஒரு பெண் தனது நகையை மீட்பதற்காக கள்ளனுடன் போராடியதில் பலத்த காயம், யாரும் உதவ முன்வரவில்லை.

சம்பவம் 2
சங்கிலியை பறிப்பதற்காக பெண்ணை தாக்கி கீழே தள்ளிவிட்டு சங்கிலியை புடுங்கியதால் அப்பெண்ணிற்கு முகமெல்லாம் காயம்.

இவையெல்லாம் பேப்பரில் வரவில்லை தெரிந்தவர்களுக்கு நடந்த கதை. நிச்சயமாக இப்படியான கதைகள் எல்லோருக்குமே தெரியும்.


இம்மாதிரியான செய்திகளுக்கு பிறகு முக்கால்வாசி பேர் தங்கநகைகளை அநாவசியமாக போடுவதில்லை. அநேகமாக கவாிங் தான், அதுவும் சிலவேளைகளில் போடுவதில்லை ஏனென்றால் அது உண்மையான நகை மாதிரி இருக்கும் பிறகு தேவையில்லாமல் கள்ளனை கூப்பிடுவது போல இருக்கும்.

தங்கநகை போடுவதென்றால் பலத்த பாதுகாப்புடன் போடுவார்கள், அதாவது யாராவது ஆண் துணையுடன் போகும் போது அல்லது வீட்டிலிருந்து போய்சேரும் இடம்வரை வாகனத்தில் போய் வரும் போது மட்டுமே..

இங்கு யாரும் நகைகள் போடவில்லையே என்று கௌரவம் பார்ப்பதில்லை. காரணம் அநாவசியமாக ஆஸ்பத்திரிக்கு போகவிருப்பமில்லை.

அப்படியும் நகை போடுபவர்கள் நிச்சயமாக கொழுப்பு கூடியவர்கள்தான்.

விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkr7.html#sthash.QgGrFfsz.dpuf
விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkr7.html#sthash.QgGrFfsz.dpuf

Monday, April 21, 2014

ஓர் இரவு...

எனக்கு English எல்லாம் பாடசாலை காலத்திலிருந்தே கொஞ்சம் அப்படி இப்படித்தான். எப்படியாவது borderல pass mark எடுத்திடுவன். O/L, A/L exam க்கு எப்படியோ credit எடுத்துவிட்டேன். A/L க்கு பிறகு Degree படிக்க போனேன் முழுக்க முழுக்க Englishதான். பிறகு எப்படியோ எனக்கு பழகிவிட்டது.

Facebook  எனக்கு அறிமுகமாகியது  2007ல் தான். அது வந்த பிறகுதான் நிறைய விசயம் எனக்கு English ல  தெரியவந்தது. 

Facebookல் அந்த நேரம் வந்த அநேகமான apps எல்லாவற்றையும் install செய்திருக்கிறேன். அதிலொன்றில் (apps பெயர் ஞாபகமில்லை) நாங்கள் அருமை பெருமையாக செய்தவற்றை  எங்கள் விருப்பங்களை, கேள்விகளாக கேட்கும். அதில் 2 options தான் விடைகளாக வரும் அதையே நாங்கள் தொிவு செய்ய வேண்டும். 

உதாரணமாக:-
1. What is your favorite brand  - Pepsi | Coke
2. Have You Ever Stolen Something from any shop? - Yes | No


இந்த ஒரு தொகை கேள்விகளில் எங்களுக்கு விருப்பமில்லாதவற்றை தவிர்க்கலாம்.

இப்படிக் கேட்டுக்கொண்டு வரும் போது ஒரு கேள்வி வந்தது.
Have you ever had a one night stand?



நான் assignments செய்வதற்காக இரவிரவாக நித்திரை முழித்து  செய்து கொண்டிருந்த நேரங்கள், முழு இரவும் முழித்திருந்த காலமும் உண்டு. அதனால் இந்த கேள்வி வந்ததும்  “அட இரவு முழுக்க கொட்டகொட்ட முழிச்சிருந்தியா என்று வேற கேட்கிறானே” என்று யோசித்து Yes என்று பதில் போட்டுவிட்டு public ல post செய்து விட்டேன். 

 பிறகு அடுத்த நாள் சும்மா பார்த்துகொண்டு போகும் போதுதான் எனக்கு உறைத்தது இது வேற எதையோ கேட்கிற மாதிரி இருக்கே என்று. dating மாதிாி ஏதோ போல என்று அக்கேள்வியை அழித்து விட்டேன். (அதுக்குள்ள எத்தனை பேர் பார்த்து முகஞ்சுழ்ச்சாங்களோ தெரியல.)  அந்த நேரம் google ல search பண்ணவேயில்ல - நம்பினால் நம்புங்க  - இப்ப இத எழுதுவதற்காக தான் search பண்ணி பார்த்தன்.


இதே மாதிரிதான் Google chat ல ஒரு இரவு நேரம் நான் நண்பியுடன் chat பண்ணிக்கொண்டிருந்தன். அதே நேரம் அவள் தெலைபேசியில் கதைத்தாள். chat ல் என் முழு விபரங்களும் கேட்கப்பட்டுக்கொண்டு இருந்தது. எப்பவுமே முசுப்பாத்தியாக கதைப்பதால் கேட்ட கேள்விகள் எல்லாத்துக்கும் royal family range ல தான் பதில் போட்டுக்கொண்டு இருந்தன். ஆனாலும் சின்ன யோசனை
தெலைபேசியில் கதைக்கும் போது chat பண்றத பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று, ஆனாலும் chat தொடர்ந்தது. (எல்லாம்  english தான், நாங்கதான் அதி மேதாவிகளே!!)

அப்போதான் அப்பா பக்கத்தில இருந்து பார்த்தார்.
யாரோட chat நடக்குது என்று கேட்டார் 
நான் என் நண்பி பெயரை சொன்னன்
அப்போ அப்பா சொன்னார் என்ன இப்படி எல்லாம் chat பண்ணுறாய் என்ன இருக்கு என்று பார்த்தா reply போடுகிறாய் என்று கேட்டார்
நான் சொன்னன், இல்ல அவ போட்டா நானும் reply போடுறேன் என்று.
அதெல்லாம் கூடாத சொல்லுகள் பாவிபட்டுக்கொண்டிருக்கு என்றார். (சத்தியமா எனக்கு அது தெரியாது)

 உடனேயே நான் திரும்ப தெலைபேசியில் கேட்டேன், நீ இப்ப என்னோட chat பண்ணிக்கொண்டு இருக்கிறாயா என்று. அவள் உடனே இல்லையே என்றாள். சும்மா விளையாட்டுக்கும் பொய் சொல்வதால் முதலில் நம்பவில்லை பிறகு chat history எல்லாம் அனுப்பினேன்.

அதுக்கு பிறகு தான் விளங்கிச்சு, அவள் office email id ஐ logout செய்யாமல் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவள் பாவிக்கும் கணணி அவளுக்கென்றே பிரத்தியோகமானது இல்லை, அதனால் office ல் இரவு நேரம் வேலை செய்த யாரோ தான் விளையாட்டு காட்டியிருக்குது. 

அடுத்த நாள் முதல் வேலையாக Boss இடம் சொல்லி பிறகு  office email id யில் உள்ள email address எல்லாவற்றையும் delete பண்ணிவிட்டாள். நல்லவேளை அந்த எருமை மாடு அதுக்கு பிறகு ஒரு சேட்டைக்கும் வரவில்லை.

அப்பா அப்பவே கேட்டார் நான் போய் Office கண்ணாடியை உடைக்கவா என்று.. ஒரு வேளை அந்த எருமை மாடு திரும்ப வந்திருந்தால் ???????????? நான் பொறுப்பில்லை.. ஹிஹிஹிஹி..


இப்பவெல்லாம் கூகிளாண்டவர் துணையுடன் தான் வலம் வருகின்றேன்.